Lyrics
உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன்
வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன் – 2
1. கால்கள் தள்ளாட விடமாட்டார்
காக்கும் தேவன் உறங்க மாட்டார் – 2
இஸ்ரவேலை காக்கிறவர்
என்னாளும் தூங்க மாட்டார் – 2
2. கர்த்தர் என்னை காக்கின்றார்
எனது நிழலாய் இருகின்றார் – 2
பகலினிலும் இரவினிலும்
பாது காக்கின்றார் – 2
3. கர்த்தர் எல்லா தீங்கிற்கும்
விலக்கி என்னைக் காத்திடுவார் – 2
அவர் எனது ஆத்துமாவை
அனுதினம் காத்திடுவார் – 2
4. போகும் போதும் காக்கின்றார்
திரும்பும் போதும் காக்கின்றார் – 2
இப்போதும் எப்போதும்
என்னாளும் காக்கின்றார் – 2
Comments
No comments yet. Be the first!