Lyrics
துதிப்பதற்கு சோர்ந்து போகாதே – நீ
ஜெபிப்பதற்கு மறந்து விடாதே – 2
சமயம் வாய்த்தாலும் வாய்க்கா விட்டாலும்
தேவ செய்தியை சொல்லிடு
சமயம் வாய்த்தாலும் வாய்க்கா விட்டாலும்
தேவனுக்கு நன்றி சொல்லிடு
ஜெபிக்கின்ற மனிதன் தேவனிடம் இருந்து
நல்ல பதில் கொண்டு வருவான் – 2
ஜெபிப்பதினால் தேவனிடம் இருந்து
ஜெயத்தைக் கொண்டு வருவான் – 2
போதிக்கின்ற மனிதன் இயேசுவிடம் இருந்து
நல்ல செய்தி கொண்டு வருவான்
போதிப்பதினால் தன் தேவனுக்காய்
ஆத்துமா அறுவடை செய்வான்
துதிக்கின்ற மனிதன் பரத்தில் இருந்து
தேவனையே கொண்டு வருவான்
துதிக்கும் போது உன் சிறையிருப்பை
தேவன் உடைத்தெறிவார்
Comments
No comments yet. Be the first!