Lyrics
தேவனே உம் வார்த்தையால்
நாள்தோறும் வாழ்கிறேன்
உந்தன் அன்பின் வார்த்தைகள்
எந்தன் வாழ்வில் ஜீவனே – 2
தண்ணீர்களைக் கடந்தேன்
தேவரீர் என்னோடு இருந்தீர் – 2
ஆறுகளைக் கடந்தேன்
அவை என்மேல் புரளவில்லை – 2
எப்பக்கம் நெருக்கப்பட்டேன்
மனம் மடிந்து போகவில்லை
இலங்கை தேசமெங்கும்
இயேசு நாமம் உயர்த்திடுவேன்
சத்துரு எதிர்க்கையிலே
தேவ ஆவி கொடி பிடித்தீர்
கிறிஸ்து என் ஜீவன்
மரணமே என் ஆதாயம்
Comments
No comments yet. Be the first!