Lyrics
சுவிஷேசமா உலக சுகபோகமா – 2
இரண்டில் எது வேண்டும் சொல் மனமே – 2
ஊரோடு மிக உயர்ந்த மாளிகையுண்டு
உனக்கு காரோடும் உல்லாச வாழ்க்கையுண்டு – 2
கூடு விட்டு உன் ஆவி சென்றால்
எங்கே செல்வாய் சொல் மனமே
உன் கூட வர இவை ஏதும் உண்டு
வருவதில்லையே மனமே
பொன்னோடும் புகழோடும் பொருளோடும்
இந்த பூமியின் மீது மகிழ்வுடன் வாழ்ந்தாலும் – 2
பாவத்தின் மீட்பின்றி மரிப்பாயானால்
எங்கே செல்வாய் சொல் மனமே
நித்திய நரகத்தில் செல்வாயானால்
மீண்டும் வருவதில்லை மனமே
Comments
No comments yet. Be the first!