Lyrics
பானையிலே சோறெடுத்து
பாதையிலே போற பொண்ணு – 2
பக்கபலமாக இயேசிருக்கார் பயந்து விடாதே
உன் அக்கம் பக்கம் ஆபத்துன்னு கலங்கி விடாதே – 2
1. கன்னத்துல கைய வைச்சு மன்னன் நினைக்கையிலே
மன்னாதி மன்னன் இயேசு மனசுக்குள் வந்தாரு – 2
என்னென்னமோ பேசணும்னு
என் மனசு நினைக்கையிலே – 2
கண்ணே மணியே ரூபவியே என்றழைச்சாரு
என் கன்னத்துல முத்தமிட்டு அரவணைச்சாரு – 2
2. வெயில் என் மேல் பட்டவுடன் கருப்பாநா
போயிட்டேன்னு வெறுப்பா பார்க்காம விருப்பப்பட்டாரு
அறுப்புக்காலத்துல வரப்புல நடக்கையில் – 2
பாதம் கல்லில் இடறாமல் தங்கி சென்றாரு
என் பிரியமே ரூபவதியே என்றழைச்சாரு – 2
3. காலங்கள் பல ஆண்டு கடந்தே போனாலும்
கர்த்தாவே உன் அன்பு என்றுமே மாறவில்லை – 2
உள்ளத்தைக் கொள்ளைகொண்ட
வெள்ளை அங்கி மன்னவனே – 2
அல்லும் பகலும் உமக்காக காத்திருப்பேன்
எனை அணைத்துக் கொண்டு
முத்தமிட சீக்கிரம் வாரும் ஐயா – 2
Comments
No comments yet. Be the first!