Lyrics
ஊரு என்னும் ஊருல
தேராகு என்னும் பேருல
பேரு பெற்ற மனுஷன் ஒருவன் வாழ்ந்தான் – 2
அவன் மண்ணினாலே சிலைகள் செய்து
மண்ணான மனிதனையே மடமையாக்கும்
தொழிலை செய்து வாழ்ந்தான் – 2
அப்பேற்பட்ட மனிதனுக்கு
ஆபிரகாமுனு பேர் கொண்ட – 2
ஆண்டவரின் பிள்ளை ஒருவன் பிறந்தான்
அவன் உண்மையுள்ளவன்
தேவபயம் நிறைந்தவன்
அவன் நீதியுள்ளவன்,
விசுவாசமுள்ளவன் – 2
தேவசித்தம் செய்ய சத்தம் கேட்டு
தன்னை தத்தம் செய்த நல்ல
நண்பன் நல்ல அன்பன் – 2
அப்பா அம்மா என் சொல்ல கேளுங்க – பெத்த
தப்பா எப்போதும் நடத்தாதீங்கோ – 2
ஜாதி ஜனம் பேரைச் சொல்லி
வீட்ட சொல்லி நாட்ட சொல்லி – 2
அவன் எண்ணங்களுக்குப் பூட்டு போடாதிங்கோ
அவன் எதிர்காலத்த வீணடிச்சுடாதீங்கோ – 2
ஆ வீட்ட விட்டு – 2
நாட்ட விட்டு ஜாதிய விட்டு
ஜனத்தை விட்டு தந்தைய விட்டு
தாய விட்டு ஓடி வா – 2
நான் உன்னை பெரிய ஜாதியாக்குவேன் – உன்
பேரை பெருமை படுத்துவேன் – உன்னை
வாலாக்காமல் தலையாக்குவேன்
உன்னை கீழாக்காமல் உன்னை
மேலாக்குவேன் – 2
உன் சந்ததிக்கு இந்த தேசத்தை கொடுப்பேன் – 2
உன்னை ஜாதிகளுக்குத் தகப்பனாக்குவேன் – 2
நீ போகும் இடமெல்லாம்
உன்னை ஆசீர்வதிப்பேன்
உன்னை காண்போர் கண்களெல்லாம்
தயை கிடைக்க செய்யுவேன் – 2
உன்னை தேசத்திற்கு திரும்பும் வரை
கைவிடாமல் காக்கும்
உன் தேவன் நான் உன் தேவன்
Comments
No comments yet. Be the first!