Lyrics
நேசரின் பாதம் அமர்ந்து நான்
ஜெபிக்கையிலே துன்பம் மறைந்து போகும்
என் வாழ்வில் இன்பம் கலந்து வரும்
அற்புதம் நடக்கும் என் வாழ்வில்
அதிசயம் பிறக்கும் என் வாழ்வில்
யோபை போல புடமிட்டாலும்
இயேசுவே நீர் தான் என் தெய்வம்
அன்னாளைப் போல நிந்தனை வந்தாலும்
இயேசுவே நீர் தான் என் தெய்வம்
சிங்கத்தின் குகை என் தங்கும் வீடானாலும்
இயேசுவே நீர் தான் என் தெய்வம்
என் அங்ககத்தின் உறுப்புகள் உருவிழந்தாலும்
இயேசுவே நீர் தான் என் தெய்வம்
வனாந்திர பாதை வறண்ட என் ஆத்மா
ஆனாலும் நீர் தான் என் தெய்வம்
இனிய கானம் இசை தனை தந்து
பாட வைக்கும் என் தெய்வம்
Comments
No comments yet. Be the first!