Lyrics
நீதிமான் மரித்துப் போகிறான்
அதை நினைவில் வைக்க ஒருவருமில்லை
நல்லவன் கடந்து போகிறான் – அவன்
நலம் கேட்க ஒருவருமில்லை
இது பொல்லாத காலம்
இது பொல்லாத காலம்
1. ஞானவான் நலிந்து போகிறான் – அவன்
ஞானம் ஒன்றும் எடுபடவில்லை
கனவான் கடந்து போகிறான் – அவன்
கனம் ஒன்றும் எடுபடவில்லை
இது பொல்லாத காலம்
இது பொல்லாத காலம்
2. பலவான் பயந்து போகிறான் – அவன்
பலமொன்றும் எடுபடவில்லை
தனவான் தணிந்து போகிறான் – அவன்
பணம் ஒன்றும் எடுபடவில்லை
இது பட்சிக்கும் காலம்
தேவ திட்சையின் காலம்
3. ஏழை ஒடுக்கப்படுகிறான் அவன்
ஏழ்மை என்றும் மறைவதில்லையே
தேவனின் மறைவில் வாழ்பவன்
என்றும் நிம்மதியாய் வாழ்ந்திடுவான்
இது இரக்கத்தின் காலம்
தேவனை அறிந்திடும் காலம்
4. கிருபையின் காலம்
இயேசுவை அறிந்திடும் காலம்
இரட்சிப்பின் காலம்
பரலோகம் சேர்ந்திடும் காலம்
Comments
No comments yet. Be the first!