Lyrics
இம்மானுவேலின் இரத்த ஊற்றதோ
எப்பாவம் போக்கும் ஜீவ ஊற்றதோ
அல்லேலுயா பார் அதோ கல்வாரியிலே அதோ
ஐந்தாறு கூடி ஓடுது
அன்பின் இன்ப வெள்ளம் பெருகுது (2)
1. பாவியான கள்ளனும் அவ்வூற்றில் ழூழ்கினான்
பாவ மன்னிப்பானந்தம் கண்டு பூரித்தான் (…இம்மானுவேலின்)
2. பாவி என்னில் கொண்ட தேவ அன்பின் அகலமே
நீளம் ஆழம் உயரம் இன்னும் வளர்ந்து செல்லவே (…இம்மானுவேலின்)
3. ஆவியால் நிறைத்து தேவ சாயலாக்கினார்
தூய இரத்தத்தால் கழுவி சுத்தமாக்கினார் (…இம்மானுவேலின்)
4. பிசாசு உலகம் மாம்சம் மூன்றும் ஜெயித்த இரத்தமே
பின்னடையா சிலுவை கொடி உயர்த்துவோம் நாமே (…இம்மானுவேலின்)
5. ஈட்டியால் குத்தப்பட்ட இயேசுவின் இரத்தமே
தீட்டுப்பட்ட குஷ்ட ரோகம் தீர்க்கும் இரத்தமே (…இம்மானுவேலின்)
Comments
No comments yet. Be the first!