Lyrics
என்னை வாழவைக்கும் அன்பு தெய்வமே
என்னை தாங்கி நடத்தும் அன்பு இயேசுவே
நீங்க இல்லாத ஒரு நிமிஷம் கூட
என்னால நெனச்சு பார்க்க முடியல
நான் போகும் இடமெல்லாம்
நீங்க வரணும் நான் அமரும்
இடமெல்லாம் நீங்க அமரணும் – நான்
பேசும் பேச்சிலெல்லாம் நீங்க இருக்கணும்
நீங்க இல்லாம நான் இல்லையே
கண்ணீரில் நான் நடந்து போது
கண்ணீரை துடைத்தெறிந்த தேவனே
கலங்கியே நின்ற எந்தன் வாழ்வில்
ஒளியாக வந்துதித்த தெய்வமே
தனிமையிலே நான் நடந்து போது
தோளோடு தோள் கோர்த்த தேவனே
தவறி நான் கீழே விழுந்த போது
தூக்கியே சுமந்து சென்ற தெய்வமே
Comments
No comments yet. Be the first!