Lyrics
என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம்
சொல்லக்கூடாதே
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
மன்னித்து விட்டாரே
கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய்
மகிழ் கொண்டாடுவோம்
நாடியே நம்மைத் தேடியே வந்த
நாதனைப் போற்றிடுவோம்
பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்
பரிகரித்தாரே
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தேற்றியே விட்டாரே
அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு
அருளிதனாலே
நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி
பகரவேண்டியதே
வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல்வீட்டில்
ஜெய கொடியுடனே
மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற
மன்னனைத் தோத்தரிப்போம்.
Comments
No comments yet. Be the first!