Devane Naan Umathandaiyil - தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கிச்
Song • the Crucifixion Songs - சிலுவைப் பாடல்கள் • Tamil

Devane Naan Umathandaiyil - தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கிச்

Lyrics

தேவனே, நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில். மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான் கோவே, தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் 1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் – பொழுது பட்டு இராவில் இருள் வந்து மூடிட தூக்கத்தால் நான் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில் நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! – தேவனே 2. பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப் பண்ணும் ஐயா, என்றன் தேவனே, கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் – தேவனே 3. நித்திரையினின்று விழித்துக் – காலை எழுந்து கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்; இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே, என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் – தேவனே 4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் – பரவசமாய் ஆகாயத்தில் ஏறிப் போயினும் வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும் மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் – தேவனே

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

Genrethe Crucifixion Songs - சிலுவைப் பாடல்கள்
LanguageTamil
Duration3:30
Chat with us