ஆவியை மழைபோலே யூற்றும் பல - Aaviyai Malai Pool Ootrum
Song • Tamil Christian Songs • Tamil

ஆவியை மழைபோலே யூற்றும் பல - Aaviyai Malai Pool Ootrum

Lyrics

ஆவியை மழைபோலே யூற்றும், – பல ஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும். அனுபல்லவி பாவிக்காய் ஜீவனைவிட்ட கிறிஸ்தே, பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும், — ஆவியை சரணங்கள் 1. அன்பினால் ஜீவனை விட்டீர் – ஆவி அருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர் இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ ஏராளமான ஜனங்களைச் சேரும். — ஆவியை 2. சிதறுண்டலைகிற ஆட்டைப் – பின்னும் தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து, பதறாதே நான்தான் உன் நல் மேய்ப்பன் யேசு பாக்கியரென்னும் நல் வாக்கையருளும். — ஆவியை 3. காத்திருந்த பல பேரும் – மனங் கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும் தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும். — ஆவியை 4. தோத்திரக் கீதங்கள் பாடி – எங்கும் சுவிஷேச ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப் பாத்திரராக அநேகரெழும்பப் பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும். — ஆவியை

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

GenreTamil Christian Songs
LanguageTamil
Duration3:40
Chat with us