Lyrics
ஆழ்ந்த சேற்றினில் அகப்பட்ட நம்மை அணைத்து எடுத்தாரே
இயேசு அணைத்து எடுத்தாரே
அலை கடல் நடுவே தவிக்கின்ற நமக்கு
ஆறுதல் அளிப்பாரே இயேசு ஆறுதல் அளிப்பாரே
பாவங்கள் போக்கி ரோகங்கள் நீக்கி
கோபத்தை கலைத்தாரே இயேசு கோபத்தை கலைத்தாரே
காவியம் போற்றும் ஆவியும் ஜீவனும் ஆகமம் ஆனாரே
இயேசு ஆகமம் ஆனாரே
கல்லறை திறந்திட காவலர் நடுங்கிட
கட்டுகள் அறுத்தாரே இயேசு கட்டுகள் அறுத்தாரே
கல்வாரி பாதையில் பார சிலுவையை நொந்து சுமந்தாரே
இயேசு நமக்கென பிறந்தாரே
பூவினில் வந்த தேவனை துதித்தால் தீவினை அகன்றிடுமே
பாலகன் இயேசுவின் நாமத்தினில் ஜெபித்தால்
பாசம் வளர்ந்திடுமே நல்ல பாசம் பாசம் வளர்ந்திடுமே
Comments
No comments yet. Be the first!